Wednesday, February 8, 2012

பிப்.28 இல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம்

வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள வைப்பகங்கள் (வங்கிகள்) தங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள இருக்கின்றன. அந்த அறிவிப்பை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ளது.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக அந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ள அந்த அமைப்பு கண்டேல்வால் குழு பரிந்துரைகளைத் தாங்கள் எதிர்ப்பதாகவும், வழக்கமான வைப்பக (வங்கி) பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையைக் கொண்டுவருவது போன்ற மற்ற சீர்த்திருத்த நடவடிக்கைகளையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.

அன்று இந்தியா முழுவதும் அதில் இடம்பெற்றுள்ள 5 இலட்சம் உறுப்பினர்கள் அந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

No comments: