Thursday, February 16, 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் பல்வேறு பதவிகளில் பணியாளர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் 10.10.2010 அன்று நடத்திய தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழ்களிலும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. tnpsc.gov.in/recruitnresults.htm இணையதளத்திலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் 2003-2004 மற்றும் 2005-2006ம் ஆண்டுகளுக்கான துணை இயக்குநர் பதவி, 2003-2004 மற்றும் 2006-2007ம் ஆண்டுகளுக்கான குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பதவி ஆகியவற்றுக்கு 2010ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் 2012, பிப்ரவரி மாதம் 28ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வு, தமிழ்நாடு பணியாளர் தேரவாணையம், எண் 1, கிரீம்ஸ் சாலை, வணிக வரித்துறை கட்டடம், சென்னை -6 என்ற முகவரியில் நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டிய விண்ணப்பாதாரர்களுக்கு தனித்தனியாக விவரங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். அன்றைய தினம், அவர்களது வயது, ஜாதி, கல்வி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். சான்றிதழ்களும் அன்றைய தினம் சரிபார்க்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

No comments: