Monday, February 6, 2012

உசிலம்பட்டி கல்லூரியில் கருத்தரங்கம்

உசிலம்பட்டி, பிப். 3: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூயில் ஆன்மிகமும், இலக்கியமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆங்கிலத் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். முதல்வர் என்.பாலுச்சாமி, ஆங்கிலத் துறைத் தலைவர் தமிழ்செல்வி, பேராசிரியர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விசுவஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம், எஜுகேட்டர் தொண்டு நிறுவனத் தலைவர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

ஏழை மாணவர்களின் கல்விப் படிப்புக்கு உதவித் தொகை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

No comments: