Monday, February 27, 2012

Bank strike

இந்த மாத இறுதிக்கணக்கு வெகுவாக பாதிக்கும் வகையில் பாங்க்., ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் நாளை ( 28 ம் தேதி) மெகா ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால் மாத இறுதி நாளில் பணப்பட்டுவாடா பல வழிகளில் பாதித்து ஒரு நாள் , இரண்டு நாள் என கால தாமதம் ஏற்பட வேண்டியிருக்கும். ( இந்த மாதம் 29ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது நினைவு கூறத்தக்கது )
காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தொழிலாளர் கொள்கை விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வு , அன்னிய முதலீடு, பொது நிறுவன பணிகளை அவுட்சோர்சிங் கொடுப்பது , வாராக்கடனை திரும்ப பெறுதலில் உள்ள சுணக்கம் பணவீக்கம் கட்டுபடுத்தாமை, கான்ட்ராக்ட் அடிப்படையில் நியமனம் கூடாது. குறைந்பட்ச கூலி சட்ட திருத்தம், அனைத்து ஊழியர்களுக்கும் பென்சன், உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம்

நடக்கிறது. நாட்டில் உள்ள 11 மத்திய தொழிலாளர் சங்கங்கள், சுமார் 5 ஆயிரம் சிறு கூட்டமைப்புகள் இதில் பங்கேற்கின்றன. பாங்க்., ஊழியர்கள் சுமார் 8 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். ரயில்வே துறையினர் மட்டும் பங்கேற்க மாட்டார்கள். இடதுசாரி அமைப்புகளான, சி.ஐ.டி.யு.,- ஏ.ஐ.டி.யு.சி., - யு.டி.யு.சி.,- ஏ.யு.டி.யு.சி.,காங்கிரஸ்ஐ.என்.டி.யு.சி.,- பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., - டி.யு.சி.ஐ., - எல். எல்.ஓ., மற்றும் பா.ஜ.,, சிவசேனா, பாரதிய மஸ்தூர் சங்கம், யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து இந்திய கம்யூ., தலைவர் குருதாஸ் குப்தா கூறுகையில்: இது போன்று அனைத்து சங்கத்தினரும் இணைந்திருப்பது இதுவரை நடக்காத ஒன்று . இது மத்திய அரசு மீதான வெறுப்பையே காட்டுகிறது. ஆர்.பி.ஐ., பி.எஸ்.யு.எஸ்., டிரான்ஸ்போர்ட, டெலிகாம், ஆயில்நிறுவனங்கள், கனிமசுரங்க நிறுவனங்கள்

உள்ளிட்வை இதில் பங்கேற்கும். தொழிலாளர் பிரச்னை குறித்து பார்லி.,யில் பல முறை குரல் எழுப்பியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. சமீபத்திய தொழிலாளர்மாநாட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால் ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் என்றார் குப்தா. பிரதமர், தொழிலாளர் துறை அமைச்சர் ஆகியோரிடம் பல முறை பேசியிருக்கிறேன். ஆனால் அவர்கள் இதற்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை. நாங்கள் பேசித்தீர்க்கவே விரும்புகிறோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
கடைசி நேர முயற்சியாக மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் யூனியன் அமைப்புகள் நிராகரித்து விட்டன. மாத இறுதி வரவு- செலவு கடுமையாக பாதிக்கும்.

No comments: