Saturday, February 18, 2012

ஜெயலலிதா குற்றமற்றவர் : நீதிமன்றத்தில் சசிகலா ஒப்புதல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்புடைய சசிகலா நடராஜன், பெங்களூரூ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி, வங்கிக் கணக்கிற்கும், ஜெயலலிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

பெங்களூரூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலாவிடம், இன்று முதன்முறையாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர் என்று சசிகலா கூறியுள்ளார்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் சசிகலா பேரில் சுமார் 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அதிமுகவில் இருந்து 2011, டிசம்பர் மாதம் நீக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: