Monday, February 6, 2012

மன்னர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை, பிப். 1: சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் 156-ம் ஆண்டு விழா, விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னர் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவர் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் தலைமை தாங்கினார். செயலர் வி.எஸ்.குமரகுரு வரவேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சிவகங்கை கிளையின் முதன்மை மேலாளர் பி.இரவிராம் பரிசுகளை வழங்கினார். மேல்நிலைத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இந்தியன் வங்கி சிவகங்கை கிளையின் முதன்மை மேலாளர் டி.சுப்பையா பரிசுகளை வழங்கினார்.

பள்ளியின் முன்னாள் மாணவரும் திரை இசைக் கவிஞருமான பூவை செங்குட்டுவன், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரும், திரை இசை மற்றும் அரசவைக் கவிஞருமான முத்துலிங்கம் ஆகியோருக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிக் குழு உறுப்பினர் எஸ்.காளீஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எம்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அழகுமலை தொடங்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மன்னர் கல்வி நிறுவனங்களின் பள்ளிக்குழு தலைவர் ஆர்.இராஜ்யலெட்சுமி நாச்சியார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் எம்.இராமகிருஷ்ணன் வரவேற்றார். சிவகங்கை இளைய மன்னர் மகேஷ்துரை, நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி இயக்குநர் சி.முருகேசன் நன்றி கூறினார்.

No comments: