Monday, March 10, 2014

ஈழத்தமிழர் விவகாரம்: சேனல் 4-ன் நெஞ்சை உலுக்கும் புதிய ஆதாரம்


ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில் மேலும் ஒரு போர்க்குற்ற ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் போரின் போது கொல்லப்பட்ட பெண் போராளிகள் மீது சிங்கள ராணுவ வீரர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. அதோடு நில்லாமல் அவர்கள் போராளிகளை கேலி செய்யும் விதமாக கூக்குரலிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் உறுதித்தன்மையை பிரபல தடவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் உறுதிசெய்தார். இப்படங்களில் பெண் போராளிகளின் உடல்களில் காணப்படும் காயங்கள் உண்மையானது என தெரிவித்துள்ள அவர் அவர்கள் மீது காணப்படும் குண்டு காயங்கள் போரினால் ஏற்பட்டதல்ல என்றும் கூறினார். இனியாவது ஈழத்தமிழர்களுக்கான நீதியை உலக நாடுகள் நிலை நாட்ட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் வேண்டுகோளாகும்.

No comments: