Saturday, March 1, 2014

அரசியல் பிரவேசமா?: ஈரோட்டில் நடிகர் விவேக் பேட்டி


ஈரோட்டில் திரைப்பட நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் காமெடி இல்லாத மிகவும் சீரியசான கேரக்டால் நடித்துள்ளேன். இதுவரை எந்த காமெடி நடிகரும் இதுபோன்று நடித்தது இல்லை. இதில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி உள்ளேன். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் பாலக்காட்டு மாதவன், வைராஜா வை, அஞ்சான் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் 21.5 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பதே என் இலக்காகும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு, சினிமாவில் நல்ல பல கருத்துக்களை மக்களிடம் சொல்கிறேன். இதுவும் ஒருவகை அரசியல்தான். எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க விரும்புகிறேன் என்றார். ஆம் ஆத்மி கட்சியில் மகாத்மா காந்தியின் பேரனே இணைந்திருக்கிறாரே என்று கேட்டதற்கு நான் ஒன்றும் காந்தி பேரன் இல்லை என்று பதிலளித்தார். முன்னதாக விழாவில் பேசும்போது, திரைப் படத்தில் பகுத்தறிவு கருத்துக்களை நகைச்சுவையுடன் கொடுத்ததால்தான் சின்ன கலைவாணர் பட்டம், பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இதற்கு ஈரோட்டில் பிறந்த தந்தை பொயார்தான் காரணம் என விவேக் கூறினார். மேலும் மரம் நடுவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் என்றும், இந்திய இளைஞர்கள் விவேகானந்தரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பேட்டியின்போது கவிதாலயம் ராமலிங்கம் உடனிருந்தார்.

No comments: