Monday, March 31, 2014

கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருதுகள் : பிரணாப் வழங்கினார்


புது தில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக நடிகர் கமலஹாசன், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பத்மபூஷண் விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கௌரவித்தார். கலைத் துறையில் சிறந்து விளக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் அனைத்துக் கலைஞர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

No comments: