Wednesday, March 19, 2014

பாரதிராஜா - ஸ்ரீதேவியை ஒன்று சேர்க்கும் ஜி.வி.பிரகாஷ்!


இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். முதன் முறையாக அவர் பென்சில் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘த்ரிஷா இலியானா நயன்தாரா’. இந்த படத்தை ஆதிக் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இந்தப் படத்தை விஜய் சேதுபதியின் மெல்லிசை படத்தை தயாரிக்கும் ரேபல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அவர்களின் பெயர்கள்தான் த்ரிஷா, இலியானா மற்றும் நயன்தாரா. இவர்கள் மூவரின் காதலில் சிக்கிய ஒரு இளைஞன், எடுக்கும் முடிவை காமெடியாக கூறும் கதைதான் இந்த படம். மேலும் படத்தின் முக்கிய வேடத்தில் பாரதிராஜாவும், ஸ்ரீதேவியும் நடிக்க உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின்னர் பாரதிராஜா-ஸ்ரீதேவி இருவரும் ஒரே படத்தில் இணைகின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

No comments: