Monday, December 8, 2014

22 - சமஸ்தானங்களை கொண்ட மாவட்டம்

இதில் நாம் மறந்த சுரண்டை ஜமீன்தார் கட்டாரி வெள்ளத்துரைபாண்டியன்

சுரண்டை இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமமாகத்தான் அறியப்படுகிறது

ஆனால் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுரண்டை ஜமீன் 320 சதுர கீ.மீ பரப்பளவு கொண்ட , பல கிராமங்களை உள்ளடக்கிய சமஸ்தானம்

இந்த சுரண்டையானது ஆப்பநாட்டை பூர்விகமாக கொண்ட மறக்குலத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை பாண்டியன் என்ற தனி நபரால் ஆட்சி செய்யபட்டது ,

சுரண்டை ஜமீன் அதிக வனப் பரப்பை கொண்டது , இதற்கு 700 ஆண்டு கால வரலாறு கூறப்படுகிறது

நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையங்களாக பிரிக்க பட்டு பின் தலைவன் கோட்டையுடன் இணைக்கபட்டுள்ளது ...

பாண்டியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததும் இதன் வரலாறு தொடங்குகிறது

இப்போதுள்ள சுரண்டை அமைப்பு :

மேற்கு தொடர்ச்சி மலைசரிவில் வீரகேரளம்புதூர் தாலுகாவில்

கீழ சுரண்டை , மேல சுரண்டை , பங்காள சுரண்டை என பிரிக்கபட்டுள்ளது ...

புலிகளை வேட்டையாடும் குணம் கொண்ட வெள்ளதுரை பாண்டியனின் முன்னோர்கள்

ஆப்பநாட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்தனர் எனவும் ,

திருமலை நாயக்கர் ஆட்சியின் போது சுரண்டை ஜமீன்தார்

வெள்ளத்துரை ( எ ) வெள்ளபாண்டி தேவர்க்கு

கட்டாரி என்ற பட்டம் வழங்கபட்டதாகவும் , சுரண்டை ஜமீன் 17-ம் நூற்றாண்டில் தோன்றியதாகவும்

திருநெல்வேலி சரித்திரத்தை எழுதிய

"கால்டுவேல்" குறிப்பிடுகிறார் ...

கட்டாரி வெள்ளத்துரைபாண்டியன் சமாதி விந்தன்கோட்டையில் உள்ளதாக கூறுகின்றனர்

பகிர்தல் :

எம்.கே.மகேஷ்வரன் 

No comments: