Saturday, December 20, 2014

உசிலம்பட்டியி தேவர் சிலைக்குள் காலணிகளோடு காவல்துறையினர் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்

சாதி மோதல்களை உண்டாக்குவதற்காக உசிலம்பட்டியை தேர்வு செய்துள்ளனர் என்று கூறி உசிலம்பட்டி பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் , வியாபாரிகள், அரசியல் கட்சியினர் என அனைவரும் நிகழ்வினை தடை செய்யவேண்டும் என்று கடந்த ஒருவாரமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 1400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் தேவர் சிலை வளாகத்திற்குள் காலணிகளோடு நுழைந்து , வளாகத்திற்குள் அமர்ந்ததால் பொதுமக்களின் எதிர்ப்புக்கு காவல்துறை உள்ளாகியுள்ளது.



இந்நிலையில் தேவர் தேசிய பேரவை சார்பில் மாநாட்டை தடை செய்ய கோரிக்கை வைத்து மனு அளிக்கபட்டுள்ளது. அதன் நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கபட்டுள்ளனர். வீட்டு காவலில் வைக்கபட்டுள்ள தேவர் தேசிய பேரவை வழக்கிறஞர் பிரிவு செயலாளர் சங்கிலி அவர்களிடம் கேட்ட போது" நாங்கள் ஏற்கனவே கூறியது போல மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி ஜாதி மோதலை தூண்ட திட்ட மிட்டே இந்த மாநாடை நடத்துகிறது. இன்று பனிமளை வழியாக தொடங்கிய ஊர்வலத்தில் பலரும் கிருஷ்ணசாமி, திருமாவளவன் படம் போட்ட பனியன்களை அணிந்து கொண்டு ஊர்வலம் வந்தனர். ஏதோ தேவரினத்திற்க்கு சாவல் விடும் தோனியிலே ஊர்வலம் நடந்தது. பொதுமக்களின் எதிர்பை மீறி மாநாட்டிற்க்கு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கதக்து. " என அவர் கூறினார்.

ஒரு சமுகத்திற்கு எதிராக ஒரு மாநாடு நடத்த படுகிறது என்றால் பொதுவான இடத்தில் நடத்த அனுமதி வழங்கலாம். இடத்தை வேறு இடத்திற்க்கு மாற்ற அரசு கேட்கலாம். இப்படி எதுவுமே செய்யாமல் அந்த சமுகம் பெரும்பாண்மையாக வாழும் இடத்தில் வேண்டுமென்றே தேவர் சமுகத்தின் எதிர்பை மீறி மாநாடு நடத்துவதால் நம்மிடம் பல கேள்விகள் எழுகின்றனர்.

No comments: