Friday, December 26, 2014

தேனி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு. எஸ். ஆர். தமிழன் இன்று காலை மரணமடைந்தார்

மிகவும் வருந்துகிறேன்
தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில இளைஞரணி செயலாளரும் தேனி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு. எஸ். ஆர். தமிழன் இன்று காலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

தேனி மண்ணின் வீரம் சரிந்தது.
போற்றுதலுக்குரிய நண்பர் செவ்வாழை ராஜு தமிழன் அவர்கள் நீண்டநாள் நண்பர் என்பதையும் கடந்து, நட்பு கெடாமல் நீண்டநாட்கள் கடந்தவர் என்பதுதான் சிறப்பானது ஆகும்.
அண்ணன் அரசகுமார் அவர்களின் ‘திராவிட விழிப்புணர்ச்சி கழக’த்தில் மாநில இளைஞர் அணிச்செயலாளர் ஆக சிறப்பாக இயங்கியவர் ஆவார்.
சு.திருநாவுக்கரசர் அவர்கள் பாஜக வேட்பாளராக களம்கண்ட போது இராமநாதபுரம் எங்கும் திறம்பட செயலாற்றினார்.
அவரது தம்பி திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம், பி.வி.கதிரவன், பி.டி.அரசகுமார், புதுமலர் பிரபாகரன் என்று வாழ்த்துவோர் வரிசை அமைத்து நட்புக்கு ‘முக்கியத்துவம்’ வழங்கியவர் ஆவார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் ஆனபிறகு அவரது அரசியல் வேகமும், வீர போராட்டங்களும் ‘விஸ்வரூபம்’ எடுத்தது என்றே சொல்லவேண்டும்.
பொதுவாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நாட்கள் தேவர் சமூக அரசியல்வாதிகளுக்கு நலனற்ற நாட்களாகவே இருந்து வருகிறது. அது இன்று ஓர் நல்லநட்பை பறித்துக் கொண்டு விட்டது.
அவரது குடும்பத்திற்கு எந்தவிட ஆறுதலும் சொல்லிவிட இயலாத துயரம் நண்பன் மறைந்தது ஆகும்.


No comments: