Wednesday, April 3, 2013

ஆகஸ்ட் 15ல் திரைக்கு வருகிறது விஸ்வரூபம் 2



கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் 'விஸ்வரூபம்'. இதில் கமலுடன் இணைந்து ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்திருந்தார்



பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியான இத்திரைப்படம் வசூலில் வாரி குவித்தது. மேலும் விஸ்வரூபம் படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கமல் முன்பே அறிவித்திருந்தார். அதன்படி விஸ்வரூபம் முதல் பாகத்தின் படப்பிடிப்பு எடுத்த போதே இரண்டாம் பாகத்துக்கான பாதி படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கமல். தற்போது எஞ்சியுள்ள படக் காட்சிகளை படமாக்கி வருகிறார். இந்நிலையில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகஸ்ட 15ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வி.டி.வி கணேஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.50 கோடி என்றும் ஏனெனில் விஸ்வரூபம்-1 படிப்பிடிப்பின்போது பாகம்-2 க்கான காட்சிகள் சுமார் 40 வீதம் படமாக்கப்பட்டு விட்டன. விஸ்வரூபம்-2 கதைக்களம் இந்தியாவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஒரே தினத்தில் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது என்றார்.



விஸ்வரூபம் திரைப்படம் 2012 ம் ஆண்டிற்கான சிறந்த நடனம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவில் தேசிய விருதினை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.



No comments: