Thursday, April 18, 2013

டிப்ஸ்.......டிப்ஸ்.......டிப்ஸ்.

* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.




* ஆசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.



* சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.



* எரிந்து கொண்டிருந்கும் பல்வின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை வரவும்



* மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது, மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும், இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.



* மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால், மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.



* வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறியிருந்தால் பாலிஷ் ரிமூவரால் அழுத்தித் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.



* வீட்டு அடுக்களையில் ஒரு டம்ளரில் மண் வைத்து அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால் துளிர்விட்டு வளர்ந்ததும் அதன் வாடைக்குப் பல்லி அறவே வராது.



* சட்டைக் காலரில் ஏற்படும் அழுக்கைத் தடுக்க ஷாம்பு கொஞ்சம் அந்த இடத்தில் தடவி பிரஷ்ஷால் தேய்த்தால் அழுக்கு எளிதில் நீங்கிவிடும்.



* வீட்டிலுள்ள காலாவதியான ஆயின்மெண்ட்களை தூக்கி எறியாமல் ஷுக்களின் மேல் நன்கு தடவி அழுத்தித் தேய்த்தால் ஷு பளபளக்கும்.

.

No comments: