Tuesday, April 16, 2013

வேளாண்மைத்துறை சார்பில் உழவர் பெருவிழா: கதிரவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


வேளாண்மைத்துறை சார்பில் உழவர் பெருவிழா: கதிரவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

நரியம்பட்டி கிராமத்தில் உழவர் பெருவிழாவிற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. கதிரவன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு இலவச கிட் மற்றும் மானிய விலையில் விசைதெளிப்பான் வழங்கினார். விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை முன்னிலை வகித்தார்.




செல்லம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலட்சுமி, தோட்டக்கலை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராஜ், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் குருசாமி, அலங்காநல்லூர் கரும்பு அலுவலர் முருகேசன், கால்நடை மருத்துவர்கள் வீரமணிகண்டன், தங்கப்பாண்டியன், வேளாண் பொறியியல் துறை ராஜா, பரமன், வேளாண்மை விற்பனைத்துறை ராமசாமி, கூட்டுறவுத்துறைகள் தலைவர்கள் மூலம் திட்டப்பணிகள் பற்றி விளக்கி கூறப்பட்டது.



கருத்துக்காட்சி அமைத்தல், மன்மாதிரி சேகரித்தல், ஒலி ஒழிப்பு, நெல்விதை நேர்த்தி வேளாண்மைத்துறை மூலம் செய்து காட்டப்பட்டது. வேளாண்மை அலுவலர்கள் குணசேகரன், சின்னதம்பி, மணிவேல், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் லதா, ராஜேந்திரன், மூவேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெகதீசன், கண்ணன், சண்முகம், ஷாலினி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். விவசாயிகளுக்கு கலைக்குழு மூலம் தொழில் நுட்ப செய்திகள் வழங்கி மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

No comments: