Monday, April 1, 2013

ADMK AGAINST THEVAR - தேவரினத்தவர் 5 பேர் மீது பி. சி. ஆர் வழக்கு – மேலும் நீடிக்க வாய்ப்பு

கோவில் பட்டி அருகே உள்ள செவக்காடு என்ற சங்கரலிங்கத்தில் பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் முழு உருவ சிலை அமைந்துள்ளது. 23.03. 2013 அன்று அதிகாலை 3 மணியளவில் சுமார் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் சிலையை சுற்றியுள கம்பிகளை தாக்கி உடைத்துவிட்டு சிலையை முற்றிலும் சேதப்படுத்தினர். அதை அறிந்த மக்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




5 பேர் மீது பி. சி. ஆர் வழக்கு :

இன்று காலை சிலர்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல்கள் வந்தது. அதையடுத்து விசாரித்ததில் 5 பேர் மீது பி. சி. ஆர் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாகவும் 10 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய காவல்துறை முற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கே சில தேவரின அமைப்புகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.



DEVARTV.COM

No comments: