Monday, April 1, 2013

உசிலையில் பெருங்காமநல்லூர் தியாகிகள் பிளக்ஸ் அகற்றம் – திரு முருகன் ஜி ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்

பெருங்காமநல்லூரில் கைரேகைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வரும் ஏப்ரல் 3 ம் தேதி வீர வணக்கம் செலுத்தப்பட இருக்கிறது. அதன் பொருட்டு உசிலையெங்கும் தியாகிகளின் வீரம் போற்றி பாரதிய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் திரு முருகன் ஜி அவர்கள் பிளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தார்.




பேனர்களை அகற்றிய போலீசார் :



இந்நிலையில் திடீரென அனைத்து பேனர்களையும் போலீசார் கழற்றினர் . தகவல் அறிந்து திரு முருகன் ஜி அவர்கள் கலற்றப்பட்டதை சுட்டிக் காட்டி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தகுந்த உடனடி நடவடிக்கை இல்லாததால் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு உருவச்சிலை முன்பாக இரண்டு குடம் தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொண்டு கொசம்போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டு உடனே பேனர்கள் திரும்ப வைக்கப்பட்டுள்ளது

No comments: