Thursday, April 24, 2014

கெளதம் கார்த்திக்


நடிகைகளுடன் என் மகன் அடித்துள்ள லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன்! - கார்த்திக் கடல் படத்தை அடுத்து கெளதமின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் என்னமோ ஏதோ. தெலுங்கில் வெளியான ஆலா மொதலாயிந்தி என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம். இதில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டேல் என்ற இரண்டு கொளுகொளு கவர்ச்சி பொம்மைகள் நடித்திருக்கிறார்கள். கதைப்படி, இவர்கள் இருவரையும் மாறி மாறி காதலிப்பதுதான் கெளதமிற்கு வேலையாம். ஆனால், எதற்காக அவர்களை அப்படி காதலித்தார் என்பதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்களாம். ஆக, அப்பா நவரசநாயகன் கார்த்திக் ரொமான்டிக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்ததை விட பலமடங்கு எகிறி அடித்து சிக்சர் போட்டிருக்கிறாராம் கெளதம். படத்தைப்பார்த்த நவரசநாயகன், இதுவரை தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காட்சிகளில் என் இடத்தை பிடிக்க ஆளில்லை என்றுதான் இறுமாப்புடன் இருந்தேன். ஆனால், அதை இப்போது என் மகன் கெளதம் பிடித்து விட்டான் என்று சொல்லி புழகாங்கிதமடைந்தாராம் கார்த்திக். அதோடு, நான் நடிகைகளுடன் அடித்தெல்லாம் ஒரு லூட்டியா... என் மகன் கெளதம் அடித்த லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன் என்றாராம் நவரசம். பைக் பிரியர் தல அஜித் பைக் பிரியர் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவரைப்போலவே இன்னொரு இளம் ஹீரோவுக்கும் பைக் என்றால் உயிர். படப்பிடிப்பு இல்லை என்றால் போதும், ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிடுவார். அலுக்கும்வரை ஊர் சுற்றிவிட்டு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாராம். அவர்..கௌதம் கார்த்திக். கடல் படத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன் ஜாலியாய் பைக்கில் நகர்வலம் வந்தாராம் கௌதம் கார்த்திக். நடிகரான பிறகு அப்படி வர முடியவில்லையாம். எனவே ஹெல்மெட் அணிந்து, முகத்தை மறைத்தபடி ஜாலி ரைட் அடிக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன் ஊட்டியிலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்திருக்கிறார் கௌதம் கார்த்திக். என்னது…ஊட்டியிலிருந்து…சென்னைக்கு…பைக்கிலேயே…என்று வாயை திறக்காதீர்கள் ப்ளீஸ்…! இதொன்றும் கௌதம் கார்த்திக்குக்கு புதுசில்லை. ஏறக்குறைய இருபது தடவைக்கு மேல், சென்னையிலிருந்து ஊட்டிக்கும், ஊட்டியிலிருந்து சென்னைக்கும் பைக்கிலேயே பயணித்திருக்கிறாராம். YENNAMO YEDHO From TOMORROW BANGALORE Theaters LIst

No comments: