Friday, January 17, 2014

மதுரை மண்ணில் பிறந்ததற்காக பெருமைபடுகிறேன் : சூரி பேட்டி


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நடிகர் சூரி, நானும் மதுரைக்காரன் தான்; மதுரை மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் என கூறினார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக நடிகர்கள் சூரியும், விமலும் வந்திருந்தனர். மக்களோடு மக்களாக அமர்ந்து உற்சாகமாக ஜல்லிக்கட்டை ரசித்த இருவரும், ஜல்லிக்கட்டை பற்றியும் அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் புகழ்ந்து பேசினர். ஜல்லிக்கட்டை பார்ப்பது உற்சாகமாக இருப்பதாக விமல் கூறினார். சூரி பேசுகையில், "மதுரைக்கு புகழ் சேர்ப்பது ஒன்று மீனாட்சி அம்மன்; மற்றொன்று ஜல்லிக்கட்டு; நானும் மதுரைக்காரன் தான்; மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் தான் எனக்கு சொந்த ஊர்; சின்ன வயதில் ஜல்லிக்கட்டு பார்த்தது; அதற்கு பின் இப்போது தான் வந்து பார்க்கிறேன்; மாடு பிடிப்பது சாதாரண விஷயமில்லை; இதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது; வீரம் நிறைந்த மதுரை மண்ணில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்" எனக் கூறினார். ஜல்லிக்கட்டில் சிறப்பாக மாடு பிடித்த வீரர் ஒருவருக்கு விமலும், சூரியும் சேர்ந்து 5000 ரூபாய் பரிசு கொடுத்து பாராட்டினர். மதுரை மண்ணில் பிறந்ததற்காக பெருமைபடுகிறேன் : சூரி பேட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நடிகர் சூரி, நானும் மதுரைக்காரன் தான்; மதுரை மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் என கூறினார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக நடிகர்கள் சூரியும், விமலும் வந்திருந்தனர். மக்களோடு மக்களாக அமர்ந்து உற்சாகமாக ஜல்லிக்கட்டை ரசித்த இருவரும், ஜல்லிக்கட்டை பற்றியும் அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் புகழ்ந்து பேசினர். ஜல்லிக்கட்டை பார்ப்பது உற்சாகமாக இருப்பதாக விமல் கூறினார். சூரி பேசுகையில், "மதுரைக்கு புகழ் சேர்ப்பது ஒன்று மீனாட்சி அம்மன்; மற்றொன்று ஜல்லிக்கட்டு; நானும் மதுரைக்காரன் தான்; மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் தான் எனக்கு சொந்த ஊர்; சின்ன வயதில் ஜல்லிக்கட்டு பார்த்தது; அதற்கு பின் இப்போது தான் வந்து பார்க்கிறேன்; மாடு பிடிப்பது சாதாரண விஷயமில்லை; இதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது; வீரம் நிறைந்த மதுரை மண்ணில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்" எனக் கூறினார். ஜல்லிக்கட்டில் சிறப்பாக மாடு பிடித்த வீரர் ஒருவருக்கு விமலும், சூரியும் சேர்ந்து 5000 ரூபாய் பரிசு கொடுத்து பாராட்டினர்.

No comments: