Thursday, January 30, 2014

மறைந்த இயக்குனர் ராசுமதுரவன் இயக்கிய 'சொகுசுப்பேருந்து'

குடும்ப சென்டிமென்ட் படங்களை தந்த மறைந்த இயக்குனர் ராசு மதரவனின் கடைசி படம் விரைவில் ரிலீசாகிறது. சொகுசு பேருந்து என்ற அந்த படத்தில் புதுமுகங்களை வைத்து ராசு மதுரவன் இயக்கினார். படம் முடியும் தருவாயில் அவர் இறந்தார். இப்போது அவரது உதவியாளர்கள் படத்தை முடித்துவிட்டார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் அமீர், சேரன், சீமான், ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இப்படத்தை ரிலிஸ் செய்யும் பொறுப்பை கையில் எடுத்துள்ள, இயக்குனர் ராசுமதுரவனின் நண்பரும், நடிகருமான ஸ்டில்ஸ் குமாரை அனைவரும் வாழ்த்தினார்கள். மேலும் இப்படத்தின் முலம் கிடைக்கும் லாபத்தை வைத்து இயக்குனர் ராசு மதுரவன் பட்ட கடனை அடைப்பது மட்டும் இன்றி, அவருடைய இரண்டு மகள்களின் படிப்பு உள்ளிட்ட எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ராசு மதுரவனின் முந்தையப் படங்களைப் போல குடும்பத்தோடு பார்க்ககூடிய விதத்தில், அதே சமயம் காமெடி, காதல் என்று உருவாகியுள்ள 'சொகுசு பேருந்து' விரைவில் வெளியாகிறது. .

No comments: