Friday, January 24, 2014

நெல்லையில் இன்று நம்மாழ்வார் நினைவேந்தல் கூட்டம்

திருநெல்வேலியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலி நல்லமுத்து இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் சார்பில், திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் உள்ள ஆர்.ஆர்.இன் ஹோட்டலில் மாலை 5.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் உழவன் தாத்தா வந்தாச்சு எனும் இசை நாடாவை தச்சை என். கணேசராஜா வெளியிட, சிந்தாமணி எம்.கே. ராமசுப்பு பெற்றுக்கொள்கிறார். நிகழ்ச்சியில், பேராசிரியர் தொ. பரமசிவன், டாக்டர் சிவராமன், அந்தோணிசாமி, கோமதிநாயகம், மயன் ரமேஷ் ராஜா, ஓவியர் க்ருஷி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். .

No comments: