Wednesday, January 22, 2014

மக்களவை தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டி: கார்த்திக்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவரும்,நடிகருமான கார்த்திக் தெரிவித்தார். கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் புதிய மாநில தலைவராக செüந்தர்ராஜன் அறிமுகப்படுத்தப்பட்டார். பின்பு செய்தியாளர்களிடம் கார்த்திக் தெரிவித்ததாவது: நாடாளும் மக்கள் கட்சிக்கு தற்போது மக்களிடையே நல்ல வரவேற்புள்ளது. பல்வேறு சமுகத்தைச் சேர்ந்தவர்களும் கட்சியில் இணைகிறார்கள். வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் பேசி வருகின்றோம்.விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றார்.

No comments: