Wednesday, January 8, 2014

ஆரஞ்சு மிட்டாய் தயாரிக்கும் விஜய் சேதுபதி !.

தனுஷ், விஷால், ஆர்யாவை தொடர்ந்து தயாரிப்பு உலகில் புதிதாக களமிறங்குகிறார் விஜய் சேதுபதி. விறுவிறுவென உச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிற விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறையவே இருக்கிறது. அதனாலதான் சங்குதேவன் என்ற படத்தை இன்னொரு தயாரிப்பாளரின் உதவியோடு ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் பாதியில் நிற்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி ”ஆரஞ்சு மிட்டாய்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த முறை அவர் வேறு யாருடைய தயவையும் நாடாமல் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி தானே நேரடி தயாரிப்பாளராக களமிறங்குகிறாராம். இப்போதைக்கு விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இது தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருக்கிறது. இது முடிந்த பிறகு “ஆரஞ்சு மிட்டாய்” படத்தில் நடிப்பார் என்று தெரிய வருகிறது. .

No comments: