Monday, September 15, 2014

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: கதிரவன் எம்எல்ஏ வழங்கினார்


உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் 150 மாணவ–மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் எலிசபெத்ராணி வரவேற்றார். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பவளக்கொடி ராசுக்காளை மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், வழக்கறிஞர் ரெட்காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சாக்கரடீஸ், முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் செந்தில் குமார், ஊராட்சி மன்ற தலைவர் தனஜெயம், அகில இந்திய பார்வர்டு பிளாக் நகர செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன், தொழில்சங்கம் முத்துப்பாண்டி, மாநில மாணவி அணியினர் எவரெஸ்ட் பால்சாமி, மாவட்ட மாணவர் அணி முருகேசன், மலைராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைமையாசிரியர் முனியசாமி நன்றி கூறினார்.

No comments: