Monday, March 7, 2011

தேமுதிகவின் 30 மாவட்ட செயலாளர்களுக்கு சீட்!

சென்னை: தே.மு.தி.க.வில் உள்ள 30 மாவட்ட செயலாளர்களுக்கு இந்த முறை எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.


சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.விற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் தொகுதிகள் பட்டியலும் அ.தி.மு.க.விடம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் அல்லது உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார்.

அவரது மனைவி பிரேமலதா விருகம்பாக்கத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஏனைய தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த காலங்களில் எக்கச்சக்கமாய் செலவழித்த மாவட்ட செயலாளர்களுக்கு இந்த முறை முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் தே.மு. தி.க.வில் உள்ள 57 மாவட்ட செயலாளர்களில் 30 பேரை தேர்வு செய்து வாய்ப்பு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். அந்த 30 மாவட்ட செயலாளர்கள் பட்டியலையும் விஜயகாந்த் தயாரித்துள்ளார்.


விஜயகாந்த், பிரேமலதா நிற்கும் தொகுதிகள் போக மீதமுள்ள 9 இடங்களின் வேட்பாளர்களாக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், எல் கே சுதீஷ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் தொகுதி வாரியாக நேர்காணல் முடிந்ததும், வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிடுகிறார்.

No comments: