Sunday, March 20, 2011

கார்த்திக் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்: நடிகர் செந்தில் பேட்டி

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ஊட்டி வந்த நடிகர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளேன். நடிகர் கார்த்திக் கட்சியினர் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். கலைஞர் வீட்டு வசதித்திட்டமும் ஒரு மோசடித்திட்டமாகும். அரசு கொடுக்கும் ரூ. 75,000ல் வீடு கட்டவே முடியாது.

இதனால் கட்டுமானப்பொருட்களின் விலை பல மடங்கு ஏறி விட்டது. விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. தென் மாவட்டங்களில் யாருடைய பலம் இருந்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. கூட்டணி அதிகளவில் வெற்றி பெறும்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தன்னோடு நடிகர்கள் ராதாரவி, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், சரவணன், சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

NOTE :THIS IS HOW ADMK AND DMK PARTIES DONT ALLOW TO UNITE ALL MUKKULATHORS.

No comments: