Tuesday, March 8, 2011

ஒரே வேண்டுகோள்.... காங்கிரஸை தோற்கடியுங்கள்! - சீமான்

சென்னை: இந்தத் தேர்தலில் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்.. காங்கிரஸைத் தோற்கடியுங்கள் என்பதுதான், என்றார் சீமான்.


நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோவை ராஜவீதியில் நடை பெற்றது. கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசுகையில், "தமிழகத்தில் புதிய மாற்றம் தொடங்கி இருக்கிறது. சாதிக்காக, மதத்துக்காக, கூடிய தமிழர்கள் இன்று தமிழ் என்ற பொது இனத்துக்காக கூட தொடங்கி உள்ளனர். இது காலம் கடந்து நடப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த உணர்வு ஏற்பட்டிருந்தால் இலங்கையில் தமிழீழம் மலர்ந்திருக்கும். அங்குள்ள லட்சக்கணக்கான தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும்.

இதை உணர்ந்து செய்வதறியாமல் நிர்கதியாக நிற்கும் தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காகவே நாம் தமிழர் கட்சி உள்ளது. மாற்றத்துக்கு நாம் தயாராக வேண்டும். எகிப்தும், லிபியாவும் நமக்கு உணர்த்துவது இதைதான்.

ஈழத்தில் தமிழர்களின் அழிவுக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும். இந்த தேர்தலில் இதுதான் என் ஒரே வேண்டுகோள். கற்ற தமிழை விற்றுப் பிழைக்கின்ற வியாபாரிகள், சுயமரியாதை, தன்மானம் குறித்து பேசக்கூடாது. அதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை...", என்றார்.

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள்.

No comments: