Saturday, March 19, 2011

30 தொகுதிகளில் போட்டி: வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுவேன்; நடிகர் கார்த்திக் பேட்டி

நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

நாடாளும் மக்கள் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்காக கட்டணம் வாங்க வில்லை. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன்.

அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். நானும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையை பொதுமக்கள் ஏராளமானோர் பாராட்டுகின்றனர். அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்த மாட்டோம். 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: