Tuesday, November 6, 2012

மதுரை பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் 2 வாலிபர்கள் பலி

மதுரை பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் 2 வாலிபர்கள் பலி






ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் கடந்த 30-ந்தேதியன்று பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்காக தென் மாவட்டங்களில் இருந்து கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்றனர்.
 
மதுரை அருகேயுள்ள எஸ்.புளியங்குளத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வர்கள் ஒரு காரில் பசும்பொன்னிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினர்.
 
மதுரை சிந்தாமணி ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் காரின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடியது. இதனால் கார் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனு மதிக்கப்பட்டனர்.
 
இதில் புளியங்குளத்தை சேர்ந்த கணேசன் மகன் ஜெயபாண்டி (வயது18), சேகர் மகன் சுந்தரபாண்டி (19), ராஜா மகன் வெற்றிவேல் (20) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி கடந்த 3 நாட்களில் ஒருவர் பின் ஒருவராக உயிர் இழந்தனர்.
 
இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தேசிங்குராஜா (19) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிர் இழந்தார். இவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
 
மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முருகன் மகன் ரஞ்சித்குமார் (20) என்பவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். 

No comments: