Wednesday, November 21, 2012

சண்முகையா பாண்டியன் கைதைக் கண்டித்து சாலை மறியல்

தேவரினக் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சண்முகையா பாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கடலாடியில் திங்கள்கிழமை சாலை மறியல் செய்தனர்.
 கடலாடி பகுதி ஊர்களில் குறிப்பிட்ட சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் சண்முகையா பாண்டியன் பேசியதாக அவரையும், ஆதரவாளர்கள் 5 பேரையும் போலீஸôர் கைது செய்தனர்.
 இதைக் கண்டித்து கடலாடி பகுதி தேவரினக் கூட்டமைப்பினர் பெண்கள் உள்பட 200 பேர் கடலாடி பஸ் நிலையம் அருகே உள்ள பசும்பொன் தேவர் சிலை வளாகப் பகுதியில் சாலை மறியல் செய்தனர். 
 இவர்களுடன் வட்டாட்சியர் உதயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். 

No comments: