Tuesday, November 20, 2012

மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி - நடிகர் கார்த்திக் வழங்கினார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா கடந்த மாதம் 30-ந்தேதி நடந்தது. அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற திருப்புவனத்தை அடுத்த அல்லிநகரம், கீழராங்கியம் ஆகிய ஊர்களை சேர்ந்த மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.


மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி - நடிகர் கார்த்திக் வழங்கினார்

அதேபோல மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளத்தை சேர்ந்த 20 வாலிபர்கள் பசும்பொன் கிராமத்திற்கு சென்று திரும்பியபோது மதுரை ரிங்ரோட்டில் அவர்கள் வந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் 20 பேரும் படுகாயம் அடைந்து மதுரையில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் விஷ்ணு பிரியன், தேசிங்குராஜா, ஜெயபாண்டி, வெற்றிவேல், சுந்தரபாண்டியன், ரஞ்சித்குமார் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.

இந்த நிலையில் அவர்களது வீடுகளுக்கு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் நேற்று சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். கட்சியின் மாநில தலைவர் பாலமுருகன், பொருளாளர் பூபாலன், மாநில கமிட்டி உறுப்பினர்கள் சாந்திபூஷன், துர்க்கைலிங்கம், கார்த்திக் ராஜன், மதுரை மாவட்ட தலைவர் கவிராஜன் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர். முன்னதாக கலவரத்தில் இறந்த திருப்புவனத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினரையும் நடிகர் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

No comments: