Tuesday, November 20, 2012

உசிலம்பட்டியில் ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: வைகோ பங்கேற்பு

உசிலம்பட்டி வீரணத் தேவர் ஜோதியம்மாள் மகாலில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் முனியாண்டி தலைமை வகித்தார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், ஒன்றிய செயலாளர் பெரியபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமார் வரவேற்றார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு புதிய மாவட்ட செயலாளரை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் 1,200 தொண்டர் அணியினருடன் பூரண மதுவிலக்கு கோரி நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை டிசம்பர் 12 முதல் 25 வரை நடைபயணம் செல்லவும் தொண்டர்களை தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் வீர.தமிழ்செல்வன், மாநகர் மாவட்ட செயலாளர் பூமிநாதன், மாநில இளைஞரணி செயலாளர் அழகுசுந்தரம், மாநில தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி, பொடா.கணேசன், விவசாய அணி சக்திவேல், வழக்கறிஞர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நகர துணை செயலாளர் ராமர் நன்றி கூறினார்.

No comments: