Saturday, November 10, 2012

அரசு பஸ்களை மறித்த பா. பிளாக் கட்சியினர் 8 பேர் கைது

கடலாடி அருகே புதன்கிழமை பந்த் நடைபெற்றபோது, அரசு பஸ் களை மறித்ததாக அ.இ.தேசிய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். பரமக்குடி, திருச்சுழி, மதுரை ஆகிய ஊர்களில் நடந்த கொலைச் சம்பவங்களைக் கண்டித்து பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்-சாயல்குடி வழித் தடத்தில் அரசு பஸ்கள் ஓடின. கடலாடி காவல் நிலைய சரகம் ஒருவானேந்தல் அருகே அரசு பஸ்களை கடலாடி ஒன்றிய அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் செயலர் நா.வெற்றிமாலை உள்பட சிலர் மறித்துள்ளனர். இது தொடர்பாக கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, இளங்செம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் 8 பேரை கைது செய்தனர்.

No comments: