Wednesday, March 6, 2013

இம்மாதம் 12ம் தேதி"டெசோ' சார்பில் "பந்த்'

இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,


"டெசோ' அமைப்பின் சார்பில், இம்மாதம், 12ம்தேதி, தமிழகம் முழுவதும், "பந்த்' நடத்தப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.டெசோ அமைப்பின், கலந்துரையாடல் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசின் இன படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்.



இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், டெசோ இயக்கத்தின் சார்பில், இம்மாதம், 12ம் தேதி, தமிழகம் முழுவதும், காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையில், பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் என, தீர்மானிக்கப்படுகிறது. இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு, கட்சி சார்பற்ற முறையில், அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



No comments: