Wednesday, March 6, 2013

ஜனதா கட்சி பெயர்ப்பலகை சேதம்

மதுரையில் ஜனதா கட்சி அலுவலகம் முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அலுவலக பெயர்ப் பலகை, கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.




சொக்கிகுளம் பகுதியில் ஜனதா கட்சியின் அலுவலகம் உள்ளது.அதன் தலைவர் சுப்பிரமணியன்சுவாமி மதுரை வந்தால் அலுவலகத்தில்தான் தங்குவது வழக்கம்.



இந்நிலையில், சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்தும், அவரைச் சந்தித்து ஆதரவு அளித்ததாக சுப்பிரமணியசுவாமியைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். அலுவலக பெயர்ப்பலகை மீது கல்வீசி தாக்கப்பட்டது. கொடிக்கம்பத்தையும் சிலர் சேதப்படுத்தினர்.



சம்பவம் அறிந்ததும் மாநகர் காவல் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான போலீஸார் விரைந்து வந்து மாணவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் ஜனதா கட்சி அலுவலக பெயர்ப்பலகை தாக்கப்பட்டது தொடர்பாக, தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



No comments: