Tuesday, March 19, 2013

ஈழ தமிழர் நம்பிக்கையை பெற இந்தியா செயல்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.,

இந்தியா மீது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், அவர்களின் நல்வாழ்வுக்கு மத்திய அரசு செயல்படவேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தென் மாநிலங்களின் செயலர் ராஜேந்திரன் கூறினார்.


ஜெய்ப்பூரில் முடிந்த ஆர்.எஸ்.எஸ்., பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில், இந்துக்களை அழிக்கும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு நாடுகளிலும் கடந்த 65 ஆண்டுகளில், இந்துக்களின் மக்கள்தொகை வெகுவாக குறைந்துள்ளது. இந்துக்களை காப்பாற்ற, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, அந்நாடுகளிடம் நஷ்ட ஈட்டைப் பெறவேண்டும். இலங்கை பிரச்னையில், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் போது, இந்திய அரசு உதவவில்லை. இந்தியா உதவும் என, நம்பியிருந்த ஈழத் தமிழர்கள் ஏமாந்து உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு இனி நடந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் மறுவாழ்வு, இழந்த உரிமைகளை மீட்டல் போன்றவற்றில், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.





No comments: