Thursday, March 28, 2013

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர்-மாணவர்கள் மோதல்

திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த பேனர்கள் மற்றும் போஸ்டர்களை, கல்லூரி மாணவர்கள் சிலர் கிழித்துள்ளனர்.




இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாகக் கூறி அவர்கள் பேனர்களை கிழித்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர், மாணவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.ஒருகட்டத்தில் இந்த கைகலப்பு, மோதலாக மாறியது. மாணவர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.



இதைத் தொடர்ந்து சாலையில் சென்ற பேருந்துகளை நிறுத்திய காங்கிரஸ் தொண்டர்கள், மாணவர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அரசு மருத்துவமனையில், மாணவர்களை பார்க்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையேயான இந்த மோதலை அடுத்து திருச்சியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments: