Tuesday, March 19, 2013

மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: வைகோ கண்டனம்.

மதுரையில் மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.




இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர்களுக்காக நீதி கேட்டு தமிழக மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மூலக்கரை என்ற இடத்திலிருந்து பேரணியாக வந்த மாணவர்கள் பெரியார் பஸ் நிலையம் அருகில் அமைதியாக அமர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார் மதுரை சட்டக் கல்லூரி மாணவர் அய்யாத்துரையை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸாரின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.



மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை உனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். 1965 ஜனவரி 25-ம் தேதி மதுரை மாசி வீதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதால்தான் புரட்சி வெடித்தது. ராணுவத்தையும் மாணவர்கள் எதிர்கொண்டனர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

.

No comments: