Monday, March 11, 2013

பார்வர்டு பிளாக் கட்சி வட சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் அராஜகமான முறையில் கைது – சாதி பகைமை காரணமா?

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் வட சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. எண்ணூர் சி.தனசேகரன் அவர்களை இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சியில் வீட்டினை உடைத்துக் கொண்டு அராஜக முறையில் உள்ளே நுழைந்த போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.




சாதி பகைமை காரணமா?

சென்னை எண்ணூர் பகுதியில் மிகவும் பிரபலமான , செல்வாக்கு மிகுந்த நபராக விளங்கி வந்த எண்ணூர் சி.தனசேகரன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்து பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்தும் அனைத்தையும் புறக்கணித்து விட்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தது அனைவரையும் ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் நாம் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து விசாரித்தபோது சாதிய பகைமையில்தான் காவல்துறையினர் நடந்துகொண்டுள்ளனர் என்றும் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் பிரச்சனைக்கு முழு காரணமாக கூறப்பட்டுவரும் ஒருவரின் தூண்டுதலின் பெயரில் நடந்துவருகிறது என்றும் கூறப்படுகின்றது.

DEVARTV.COM

No comments: