Friday, March 1, 2013

அமைச்சரிடம் இருந்து கட்சி பதவி பறிப்பு

அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவிகள் பறிப்பு, அ.தி.மு.க.,வில் தொடர்ந்தபடி உள்ளது. இரண்டாவது நாளாக இன்று, மேலும் ஒரு அமைச்சரின் கட்சிப் பதவியை பறித்து, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து, ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட செயலராக இருந்த செந்தூர் பாண்டியன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, குற்றாலம் பேரூராட்சி செயலராக இருக்கும், குமார் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்படுகிறார். கடலூர் மேற்கு மாவட்ட செயலராக இருக்கும் மாரிமுத்து, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, சிதம்பரம் முன்னாள் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், கடலூர் மேற்கு மாவட்ட செயலராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: