Friday, March 15, 2013

இலங்கை தமிழர் பிரச்சினை: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-




அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும். தன்னெழுச்சியாக அரசியல் சார்பில்லாமல் போராடும் மாணவர்களை மாநில அரசு எந்த வடிவத்திலும் ஒடுக்கக்கூடாது என்றும் எவ்விதமான நிர்பந்தங்களுக்கும் உள்ளாக்கக்கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.



மேலும் அறவழியில் போராடிவரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் களத்திலும் முழுமையாக துணை நிற்கும் என்றும் உறுதியாக தெரிவித்து கொள்கின்றேன்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: