Sunday, March 17, 2013

கவிஞர் வைரமுத்துவின் தந்தை மரணம் : வடுகபட்டியில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறு

கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமித்தேவர் நேற்று பகல் 12.30 மணியளவில் சொந்த ஊரான வடுகபட்டியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. 

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிறுநீரகச் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலிருந்து வடுகபட்டிக்குக் கொண்டுவரப்பட்டார். வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்தது. 

மறைந்த ராமசாமித்தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து -பாண்டியன் (காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்) என்ற இரண்டு மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். தகவல் அறிந்த கவிஞர் வைரமுத்து குடும்பத்தினருடன் வடுகபட்டி விரைந்தார். 

வைரமுத்துவின் சொந்த ஊரான பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.

No comments: