Wednesday, April 6, 2011

தென்காசியில் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

தென்காசி, ஏப்ரல் 5: தென்காசியில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர் பரமசிவன் இன்று திடீரென அதிமுகவில் இணைந்தார். மேலும், அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.

வேட்புமனு பரிசீலனை முடிந்து தொகுதியில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென ஒரு வேட்பாளர் வேறு கட்சியில் சேர்ந்துள்ளது தென்காசியில் பேசப்படும் விஷயமாக ஆகியுள்ளது.

No comments: