Sunday, April 3, 2011

தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்: இயக்குநர் சீமான் பேச்சு


தி.மு.க. மற்றும் காங்கிரஸ் அமைத்துள்ள சந்தர்ப்பவாத கூட்டணிக்கு வாக்களிக் காதீர்கள் என இயக்குனர் சீமான் பேசினார்.

திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரைப்பட இயக்குனர் சீமான் கதிர்அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு பேசினார்.

இதில் மாவட்ட அமைப்பாளர் முத்துகுமார் வரவேற்றார். தென்றல் சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில் பேசிய சீமான், இதுவரை 550-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது.

அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசு இப்பொழுது மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம். தமிழர்களுக்காக பாடுபடுபவர் நல்லக்கண்ணு தான்.

ஆகையால் சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காமல் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மேலும் இலங்கையில் 1.5 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முழு பொறுப்பும் காங்கிரஸ் அரசு எனவும் இந்தியாவில் நடைபெறும் உலககோப்பை போட்டியை பார்க்க வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு அளிக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு தமிழர்களின் ரத்தம் எனவும் மத்திய அரசை கடுமையாக சாடினார்.

No comments: