Monday, April 4, 2011

வடிவேலுவின் ரகசியத்தை வெளியிடுவேன்: நடிகர் சிங்கமுத்து எச்சரிக்கை

விழுப்புரம் தொகுதி யில் அ.தி.மு.க.வை ஆதரித்து நடிகர் சிங்க முத்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகிலும், வளவனூரிலும் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த தேர்தலில் தொலை நோக்கு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலவச டி.வி. குட்டி போடாது. ஆனால் ஆடுகளை கொடுக்கும் போது ஆடு குட்டி போட்டு ஏழைகளின் வறுமையை போக்கும். அன்றாட வருமானத்தை பெருக்கும். கிராமத்து கிழவி பணத்தை மடியி செருகிக் கொண்டு மகிழ்வாள். மிக்சி கொடுப்பதாக கருணாநிதி கூறியுள்ளார்.

மிக்சி கொடுத்தால் மட்டும் போதுமா? மின்சாரம் வேணுமே அதற்குதான் மிக்சியும், கிரைண்டரும் கொடுப்பதோடு தடையில்லா மின்சாரத்தையும் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். விஜயகாந்த், பிரசார வேனுக்குள் விழுந்த வயரை எடுக்க சொல்லி தனது வேட்பாளரிடம் கூறியுள்ளார். அதற்குள் அந்த வேட்பாளரை விஜயகாந்த் அடித்து விட்டதாக கிராபிக்ஸ் செய்து காண்பித்து விட்டனர். காமெடி பீஸ் (நடிகர் வடிவேலு) மாதிரி காசு வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்ய நான் இங்கு வரவில்லை.

எனது சொந்த பிரச்சினையை சொல்வதற்காகவும் வரவில்லை. தே.மு.தி.க. விஜயகாந்தை காமெடி பீஸ் ஜெயலலிதாவை திட்டுவதில்லை. ஏனென்றால் அவர்தான் ஆட்சிக்கு போகிறார் என்று இவருக்கு நன்றாக தெரியும். ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா பக்கம் காமெடி பீஸ் சென்று விடும். இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

விஜயகாந்துக்கு காலை அமுக்கி விட்டு அவரிடம் சான்ஸ் கேட்டவர் இன்றைக்கு அவரையே திட்டுவதா? வடிவேலுவிற்கு நான் ஒரு எச்சரிக்கை விடுகிறேன். விஜயகாந்த்தை விமர்சனம் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். நீ சீண்டினால் நான் நோண்டுவேன். இரவு 7 மணிக்கு மேல் நீ என்னென்ன செய்வாய் என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் நான் சொல்வேன்.

இவ்வாறு நடிகர் சிங்கமுத்து பேசினார்.

No comments: