Tuesday, April 19, 2011

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் தேர்வு தீவிரம்

லண்டன், ஏப்.19- இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் தான் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவதால் தனது பதவிக் காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. தற்போது, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உள்ள அன்டி ஃபிளவர், டங்கன் பிளெட்சர் ஆகியோர் இறுதிக்கட்டப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அன்டி ஃபிளவரை தக்க வைத்துக்கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அவருக்கு மிகப் பெரும் தொகையை சம்பளமாக வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments: