Friday, April 8, 2011

நடிகர் செந்தில் பிரசாரத்தில் தி.மு.க.,வினர் கல்வீச்சு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நடிகர் செந்தில் பிரசாரம் செய்யும் போது, தி.மு.க.,வினர் கற்களை வீசினர். அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை காமராஜர் சிலை அருகே நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த வெள்ளக்கோட்டையை சேர்ந்த கந்தன், அம்மன்கோவில் தெருவை சேர்ந்த நல்லமுத்து ஆகிய இருவர் கூட்டத்தை நோக்கி கற்களை வீசினர். பொதுமக்கள் துரத்தியபோது, நல்லமுத்து தப்பிஓடிவிட்டார். கந்தனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செந்தில் கூறியதாவது: தி.மு.க.,விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் கூட்டத்தை கலைக்க கல் வீசுகின்றனர். தைரியம் இருந்தால் என் மீது வீச வேண்டியதுதானே. எதற்கு மக்கள் மீது வீசுகிறார்கள், என்றார்.

No comments: