Tuesday, April 26, 2011

ஐ.நா.அறிக்கை எதிரொலி: ராஜபக்சே தம்பி அமெரிக்கா பயணம்- இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்ட முயற்சி

இலங்கை போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளிவந்து இருப்பதை அறிந்து இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிக்கையால் இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் குற்ற விசாரணை நடக்காமல் தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு உள்ளது. இதற்காக அதிபர் ராஜ பக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே ரகசியமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா மற்றும் சில நாடுகளை தங்களுக்கு ஆதரவாக மாற்றும் முயற்சி யில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது

No comments: