Sunday, October 26, 2014

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. தேவரின் 106–வது ஜெயந்தி விழா மற்றும் 46–வது குருபூஜை விழா வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையொட்டி பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். தற்போது பசும்பொன் கிராமத்துக்கு வந்து செல்வோரை கண்காணிக்க அங்கு 24 மணி நேரமும் கமுதி சப்–இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments: